பூமாலை

நண்பர்களின் கவிதை தொகுப்பு

Monday, April 11, 2005

நீ - ப்ரியா

அழுகிற பிள்ளையை
அணைக்காத அன்னை
நீ...

கடலோடு சேராத
கங்கை நீ...

ராகங்கள் சொல்லாத
புல்லாங்குழல் நீ...

மண்னோடு முட்டாத
மழைத்துளி நீ...

தவத்திற்கு மயங்காத
கடவுள் நீ...

எனக்கு காதல்
இடாமல்
சபிக்கின்ற சாத்தான்
நீ!!

- ப்ரியா.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home