பூமாலை

நண்பர்களின் கவிதை தொகுப்பு

Monday, April 11, 2005

பித்து - ப்ரியா

சட்டென சென்றுவிட்டாய்
திருவிழாவில்
தொலைந்த
குழந்தையாய்..
உன்னுடன் சென்ற
இடமெல்லாம்
தேடித் தேடி சலிக்கிறேன்!

நீயோ,
வார்த்தைகளையெல்லாம்
புதைத்து வைக்கிறாய்;
வழிகளையெல்லாம்
அடைத்து வைக்கிறாய்;
உனக்கும் எனக்குமான
தொலைவை அதிகரிக்கிறாய்
விடைத் தெரியாமல்
உலகில்
சூன்யமாய் அலைகிறேன்...

உன்னை சுமந்து அலைந்த..
நம் காதலிருந்த இடம்
ஏன் பாறாங்கல்லாய்
கனக்கிறது..?

முன்பு உன் மேல் எனக்கு
காதல் பித்து...
இன்றோ உன்னால்
நானே பித்து....!!

- ப்ரியா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home