பூமாலை

நண்பர்களின் கவிதை தொகுப்பு

Monday, April 11, 2005

பாரா தோழமை - மீனா

ஆறு கோடி தமிழினில்
ஒரு அன்பான "ஹலோ"வில்
அழகாய் அறிமுகமானாய்...

அழகான புது படம்...
அர்த்தமில்லா கோபம்...
அதிகமான "அப்புறம்"...
அடுத்த வீட்டு நண்பர்கள்...
பகிர்ந்தவை இவை மட்டுமே
எனினும் நேசத்தின் தலையெழுத்து
நம்மில் சிக்கி தவிக்கிறது...

"பார்த்து பார்த்து" பிடித்து போனது
பார்த்தால்தான் இனிக்கும்
பார்க்காமலே பிடித்து போனது
நினைத்தாலே இனிக்கும்...

இனிப்பான தோழமையே
உன்னை வாழும் வரை நினைத்திருபேன்
அந்த நினைவை கவிதை ஆக்கி ரசித்திருப்பேன்...

- மீனா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home