பூமாலை

நண்பர்களின் கவிதை தொகுப்பு

Thursday, April 21, 2005

யாரோ அவன் யாரோ! - மீனா

காமெடி வாழ்க்கையில் இருந்து
கல்யாண வாழ்க்கையில்
கால் எடுத்து வைக்கிறேன் - என்
கல்யாண கலக்கலை
கவிதையில் சொல்கிறேன்...

தெய்வங்கள் சாட்சியாய்
மூன்று முடிச்சு இட்டுவிட என்னவன் என்னருகே...
அவன் இரு கரங்களுக்கு இடையே சிரம் தாழ்த்தி நான்...
என்னையும் மீறி வந்த ஒரு கண்ணீர் துளி
கட்டை விரலால் தட்டி விட்டு,கண்ணடித்து
குனிந்துக் கொண்டேன்...கண்டு கொள்ளாமல்

அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வேண்டுமாம்
எல்லோரும் சொன்னார்கள் - நான் அம்மி
மிதிக்கும் சாக்கில் என்னவனின் பெருவிரலை
அழுத்தி விட்டு "சாரி" சொல்லி திரும்பி விட்டேன்
நக்கலாக...

வாஸ்த்து பார்த்து வடிவமைத்த வீட்டில்
குடிபுகுந்தேன் புதிதான என்னவனோடு...
மிரட்சியில் மென்று விழுங்கியபடி
என்வனைப் பார்த்தேன் - வாழ்கையில் முதல் முறை ஒரு
பார்வையால் காயப்பட்டேன் - ஆம் அவன்
எனை பார்த்துக்கொண்டிருந்தான்

என் பிஞ்சுவிரல் பற்றி
பளிச்சென கேட்டான் "என்னை பிடிச்சிருக்கா?"
"ம்ம்ம்..." சாதாரணமாக சொல்லி விட்டேன் - ஆனால்
மனதில் எண்ணிலடங்கா ஏக்கங்கள்

மறுநாள் எழும்ப மனமின்றி
உறங்கி கொண்டிருந்தேன் - என்னவனோ
என் மெட்டியில் முத்தமிட்டு மெல்லிய தாடி தொட்டு
"எழுந்தரிடா மணி ஏழு ச்சு" - நானே
"போடா என் அன்பு புருசா,இன்னும் கொஞ்ச நேரம்..."

சில்லென்ற சில்மிஷங்களோடு நானும் அவனும்
சமையலறையில்...என்னை சீண்டாமல்
சிக்க வைக்கும் அவனது கண்கள்
காமனின் பாணங்கள் போலும்
தெரியாத சமையலையும் சமாளிக்கிறேன்
என்னவனோடு...

கற்கண்டாய் கரையும் இந்த வாழ்வை
நான் இன்னும் பெறவில்லை - ஏனெனில்
பருவ ஏடுகளின் கனவுகளால் பாதிக்கபட்ட
என் இதயத்தை அலங்கரிக்க
என்னவனும் இன்னும் வரவில்லை
நெற்றியில் கை வைத்து
கண்களை சுருக்கி காத்திருக்கிறேன்

யாரோ அவன் யாரோ!

- மீனா.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home