பூமாலை

நண்பர்களின் கவிதை தொகுப்பு

Friday, April 29, 2005

ப்ரியமானவனுக்கு - வளர்பிறை

தினம் தினம் சந்திக்கிறோம்
சிலிர்ப்பாய் பூத்திருக்கும் ரோஜாக்களாய்
ஆனாலும் மெளனமாய் பிரிக்கின்றோம்
பறிக்காமல் உதிரும் இதழ்களாய்!

நாளை நாளை என்று சொல்லிட நினைக்கின்றேன்;
உன் நினைவுகளை நெஞ்சோரம் சேகரிக்கின்றேன்!
என் சின்ன சின்ன கண்களுக்குள்
ஏகமாய் ஆசைகள் வளர்க்கின்றேன்!

உன்னை தினம் பார்க்கும் பொழுதெல்லாம்
ஒத்திகை பார்த்ததெல்லாம் மறப்பது ஏன்?
ஊர் கதையெல்லாம் நிரம்ப பேசியப் பின்னும்
நம் உள்ளத்தின் கதை இன்னும் உள்ளே உறங்குவது ஏன்?

இனியும் மெளனங்கள் சகிப்பதற்கு இல்லை
நம்மிடையே கண்ணாடிச்சுவர்கள் பொறுப்பதற்குயில்லை
கண்கள் பேசிய ஜாலங்களெல்லாம்
உள்ளத்தோடு உள்ளமாய்
மொழிப் பெயர்க்கின்றேன்!

மனதொன்று நினைக்க உதடொன்று பேச
போலி வேஷங்கள் இன்னுமா?
மொழிகள் எல்லாம் எனக்குத்தான் பஞ்சம்
பதில் சொல்லேன் மெளனத்தில் நீயுமா?

- வளர்பிறை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home